பட்டறையும் , பத்திரையும் (விஸ்வப்பிரம்ம வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்)
அடுத்து ஓந்தாச்சிமடம் எனும் மிகப்பழமை வாய்ந்த நகர்ப்புறம் சார்ந்த
கிராமத்தில் ஓந்தாச்சிமடம் எனும் பெயரில்
அடையாளமாக விளங்குவது ஓந்தாட்சி எனும் சிற்றரசனால் கட்டப்பட்ட மடத்தில் மிகப்பழம்காலம் முதலாக மாரியம்மன் வழிபாடு , அதன் அருகில் கற்பகப்பிள்ளையார் ஆலயமும்
ஓந்தாச்சிமடத்தின் தென்திசை சார்ந்த விஸ்வ குல கம்மியரின் சிறப்பு மிக்க
வழிபாட்டுத் தலமாகவும் , ஓந்தாச்சிமடத்தின் வடபால் விஸ்வ குல கம்மியரின்
குலதெய்வமான பத்திரகாளி அம்மனுக்கு ஆலயம் அமைத்து மிக சிறப்பான சக்தி விழாக்களையும்
செய்து வருவதோடு ஓந்தாச்சிமடத்தின் பிரதான வீதியில் மேற்குத் திசை சார்ந்து
அரசடி பிள்ளையார் என்ற பெயரோடு விநாயகர்வழிபாட்டையும் மேன்மைபடுத்தி வருகின்றனர். ஓந்தாச்சிமடத்தின் மத்தியில் ஆலயம்என்ற பழமையான பெயரோடு மகாவிஷ்ணு பகவானுக்கு ஒரு தனி ஆலயமும் ,அவ்வாலயத்தில் காளியின்அம்ச தேவதையான சண்டிமா தேவிக்கு தனி வழிபாடு இயற்றி தீமிதித்தல் எனும் புனித நிகழ்வோடு இவ்வாலயத்தையும் நடத்தி வருகின்றார்கள். இதை தொடர்ந்து அன்னமலை எனும் விஸ்வ குல கம்மியரின் பண்டையப் புகழ்வாய்ந்த பெரும் கிராமத்தின் ஆதிகாலம் முதலாக விஷ்வ குல கம்மியரின் பெரும் குடியிருப்பும் அங்கே கண்டி மன்னருடைய காலத்தின் பாப்பையதட்டர் என்ற கங்கானியருக்கு சாசன உரிமையும் குடிவழமை சார்ந்த உரிமை உரித்தோடு சித்தி விநாயகர் ஆலயத்தையும் சிறப்பாக அமைத்து அன்னமலையின் வடபால் வடபத்திர காளியம்மன் ஆலயத்தையும் சிறப்போடு அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் இதை தொடர்ந்து அக்கரைப்பற்று நகரம் சார்ந்த பெரும் கிராமத்தின் விஷ்வ குல கம்மியர்கள் சீர் மிகுந்த சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர் அங்கு மித பழமை வாய்ந்த பத்திர காளியம்மன் ஆலயத்தை அமைத்து மிகசிறப்பான வழிபாட்டை செய்து வருகின்றனர் இதைபோல் தம்பிலிவில் கிராமத்தின் மேற்கு புறம் சார்ந்த முனையக்காடு என்னும் முனையூர் பதியில் பத்திரகாளியம்மனுக்கு ஒரு சிறப்பான ஆலயத்தை அமைத்து உணர்வு பூர்வமாக வழிபாடு செய்து வருகின்றார்கள். பொத்துவில் பிரதேசத்தில் குறைந்த அளவிலான விஸ்வகுல கம்மியர்கள் பூர்வகாலமாக வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டதற்கான ஆதாரம் தெரியப்படவில்லை. மேற்குறித்த ஆலயங்களில் பெரிய போரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன்ஆலயம், அன்னமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் ஆகிய படுவான்கரை சார்ந்த முல்லை மருதம் குறிஞ்சி நிலப்பூமியிலே அமையப்பெற்று இருக்கின்றன பட்டிருப்பு துறையை கடந்து பெரியபோரதீவு தலை கிராமத்திலே இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. கல்முனை கிட்டங்கி துறையை கடந்து சவளக்கடை நாவிதன் வெளி எனும் கிராமங்களை கடந்தால் அன்னமலைக் கிராமத்தின் பத்திரகாளியம்மன் ஆலயத்தை அடையலாம் ஏனைய ஏறாவூர் ஆரையம்பதி, ஓந்தாச்சிமடம், பெரிய கல்லாறு, பாண்டிருப்பு, அக்கரைபற்று தம்பிலுவில் ஆகிய இடங்கள் எழுவான்கரை சார்ந்த பெருநிலங்களில் அமைந்து இருக்கின்றன ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலயம் நகர்ப்புரம் சார்ந்த நிலப்பகுதியாகவும், ஆரையம்பதி நகர்புறம் சார்ந்த பதியாகவும் ஒந்தாசிமடம் பெரிய கல்லாறு பாண்டியிருப்பு ஆகியன நெய்தல் நிலா கடற்கரை சார்ந்த நிலப்பதியாவும் அக்கரைப்பற்று நகர்புறம் சார்ந்த பதியாகவும் தம்பிருவில் முல்லை மருதம் சார்ந்த நிலப்பதியாகவும் இப்பத்திர காளியம்மன் ஆலயங்கள் அமைந்து சிறப்பு பெறுகின்றன
அரசடி பிள்ளையார் என்ற பெயரோடு விநாயகர்வழிபாட்டையும் மேன்மைபடுத்தி வருகின்றனர். ஓந்தாச்சிமடத்தின் மத்தியில் ஆலயம்என்ற பழமையான பெயரோடு மகாவிஷ்ணு பகவானுக்கு ஒரு தனி ஆலயமும் ,அவ்வாலயத்தில் காளியின்அம்ச தேவதையான சண்டிமா தேவிக்கு தனி வழிபாடு இயற்றி தீமிதித்தல் எனும் புனித நிகழ்வோடு இவ்வாலயத்தையும் நடத்தி வருகின்றார்கள். இதை தொடர்ந்து அன்னமலை எனும் விஸ்வ குல கம்மியரின் பண்டையப் புகழ்வாய்ந்த பெரும் கிராமத்தின் ஆதிகாலம் முதலாக விஷ்வ குல கம்மியரின் பெரும் குடியிருப்பும் அங்கே கண்டி மன்னருடைய காலத்தின் பாப்பையதட்டர் என்ற கங்கானியருக்கு சாசன உரிமையும் குடிவழமை சார்ந்த உரிமை உரித்தோடு சித்தி விநாயகர் ஆலயத்தையும் சிறப்பாக அமைத்து அன்னமலையின் வடபால் வடபத்திர காளியம்மன் ஆலயத்தையும் சிறப்போடு அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் இதை தொடர்ந்து அக்கரைப்பற்று நகரம் சார்ந்த பெரும் கிராமத்தின் விஷ்வ குல கம்மியர்கள் சீர் மிகுந்த சிறப்போடு வாழ்ந்து வருகின்றனர் அங்கு மித பழமை வாய்ந்த பத்திர காளியம்மன் ஆலயத்தை அமைத்து மிகசிறப்பான வழிபாட்டை செய்து வருகின்றனர் இதைபோல் தம்பிலிவில் கிராமத்தின் மேற்கு புறம் சார்ந்த முனையக்காடு என்னும் முனையூர் பதியில் பத்திரகாளியம்மனுக்கு ஒரு சிறப்பான ஆலயத்தை அமைத்து உணர்வு பூர்வமாக வழிபாடு செய்து வருகின்றார்கள். பொத்துவில் பிரதேசத்தில் குறைந்த அளவிலான விஸ்வகுல கம்மியர்கள் பூர்வகாலமாக வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டதற்கான ஆதாரம் தெரியப்படவில்லை. மேற்குறித்த ஆலயங்களில் பெரிய போரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம், முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன்ஆலயம், அன்னமலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் ஆகிய படுவான்கரை சார்ந்த முல்லை மருதம் குறிஞ்சி நிலப்பூமியிலே அமையப்பெற்று இருக்கின்றன பட்டிருப்பு துறையை கடந்து பெரியபோரதீவு தலை கிராமத்திலே இவ்வாலயங்கள் அமைந்துள்ளன. கல்முனை கிட்டங்கி துறையை கடந்து சவளக்கடை நாவிதன் வெளி எனும் கிராமங்களை கடந்தால் அன்னமலைக் கிராமத்தின் பத்திரகாளியம்மன் ஆலயத்தை அடையலாம் ஏனைய ஏறாவூர் ஆரையம்பதி, ஓந்தாச்சிமடம், பெரிய கல்லாறு, பாண்டிருப்பு, அக்கரைபற்று தம்பிலுவில் ஆகிய இடங்கள் எழுவான்கரை சார்ந்த பெருநிலங்களில் அமைந்து இருக்கின்றன ஏறாவூர் பத்திரகாளியம்மன் ஆலயம் நகர்ப்புரம் சார்ந்த நிலப்பகுதியாகவும், ஆரையம்பதி நகர்புறம் சார்ந்த பதியாகவும் ஒந்தாசிமடம் பெரிய கல்லாறு பாண்டியிருப்பு ஆகியன நெய்தல் நிலா கடற்கரை சார்ந்த நிலப்பதியாவும் அக்கரைப்பற்று நகர்புறம் சார்ந்த பதியாகவும் தம்பிருவில் முல்லை மருதம் சார்ந்த நிலப்பதியாகவும் இப்பத்திர காளியம்மன் ஆலயங்கள் அமைந்து சிறப்பு பெறுகின்றன