..:: விஷேட நிகழ்வுகள் ::..
உற்சவகால விஷேட நிகழ்வுகள்
- செவ்வாய்கிழமை திருக்கதவு திறத்தல்
- புதன்கிழமை காலை, பகல் பூஜையும் இரவு பூஜையுடன் அம்பாள் கும்பத்தில் அமர்ந்து ஆலய வலம்வருதல்
- வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மூன்று நாட்களும் காலை, பகல் பூசையும் மாலை அம்பாள் கும்பத்தில் அமர்ந்து ஊர்வலம் வருதல்
- ஞாயிற்றுக்கிழமை காலை வீரகம்பம் வெட்டுதல் பிற்பகல் வாழைக்காய் எழுந்தருளல் இரவுத் திருவிழா
- திங்கட்கிழமை, இரவு அம்பாள் முத்துச்சப்ரத்தில் ஊர்வலம் வருதல் செவ்வாய்க்கிழமை, காலை நோர்ப்பு, நெல் எடுத்தல், நோர்பு நெல் குற்றல் , பகல் யாகபூஜையும் நெல் குற்றல் ,பகல் யாகபூஜை, நோர்ப்பு பிரசாதம் வாங்குதல், கடல் நீராடலும், நல்ளிரவு தீக்குழிக்கு தீ மூட்டுதல்
- புதன்கிழமை காலை தீமிதித்தல், அதன்பின்பு ஆயுத பூஜையும் அருள் வாழி பாடுதலுடன் உற்சவகால நிகழ்வுகள் நிறைவடையும்.
- எட்டாம் நாள் செவ்வாய்கிழமை இரவு வைரவர் பூஜையும், தீக்குழிக்கு பால்வார்தலும் இடம் பெறும்
ஆடிப்பூர நிகழ்வுகள்
அடியார்கள்
பாற்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு அம்பாளுக்கு பாலாவிஷேகம் செய்தலும் பின் பூஜையும் இடம்பெறும்
கேதார கெளரிவிரதம்
அடியார்கள் தினமும் ஆலயத்தில் விரதமிருந்து 20ம் நாள் உபவாசமிருந்து மறுநாள் பாரணை செய்து விரதத்தை
நிறைவு செய்தல்.
கந்தசஷ்டி விரதம்
அடியார்கள் தினமும் ஆலயத்தில் விரதமிருந்து 6ம் நாள் உபவாசமிருந்து 7ம் நாள் பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்தல். இதில் சிறப்பு நிகழ்வாக 6ம் நாள் மாலை சூரன் போரும், 7ம்நாள் முருகப்பெருமான் திருக்கல்யாணமும் இடம் பெற்றும்.