பட்டறையும் , பத்திரையும் (விஸ்வப்பிரம்ம வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்)
மட்டக்களப்பு
தமிழகத்தில் மிகப்பழமை வாய்ந்த வழிபாடாக மிளிர்வது காளி வழிபாடாகும். இக்
காளி வழிபாடு தாய்த்தெய்வ வழிபாட்டின் தொன்மமாகும். இலங்கைத் திரு நாட்டில் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் காளி வழிபாடு சிறப்போங்கி அமைகின்றன யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பெரு மாவட்டங்களில் மிகப்பெரும் பழமை வாய்ந்த பத்திரகாளி ஆலயங்கள் இயங்குகின்றன.
கொழும்பு மாநகரிலும் காலி போன்ற சிங்கள பிரதேசங்களிலும் காளி வழிபாடு அமைகின்றன. இத்தகு உயரிய சிறப்புமிக்க அன்னை வழிபாடாகிய காளி வழிபாடு கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கூனித்தீவு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் ஈறாகவும் விஸ்வப் பிரம்மகுலத்தவர்கள் என போற்றப்படும் கம்மியர்களின் குலதெய்வ வழிபாடாக தாங்கள் தொழில் செய்யும் பட்டறை எனும் அடையலில் பத்திர காளியம்மனை யந்திர பிரதிஷ்டையாக வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கூனித்தீவு பத்திர காளி கோயில் (திருகோணமலை மாவட்டம்)
ஏறாவூர் பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
ஆரையம்பதி பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
ஓந்தாச்சிமடம் பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
பெரிய கல்லாறு பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
பாண்டிருப்பு பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
அன்னமலை பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
அக்கரைப் பற்று பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
தம்பிலுவில் பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
மேற்குறித்த இடங்களில் விஸ்வகுல கம்மியர்களும் சீர்மிகுந்த சிறப்போடுவாழ்கின்றனர். இதில் பெரிய கல்லாறு விஸ்வகுல கம்மியர்கள் முருக வழிபாட்டையும் தங்களோடு ஈடுபடுத்தி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் என்ற பெயரோடு பழமை வாய்ந்த முருகன் கோயிலையும் நெய்தல் நிலமாகிய கடற்கரை சார்ந்த உதயபுரம் எனும் திருவிடத்தில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தையும் அமைத்து வழிபடுகின்றனர்
இதே போல் பாண்டிருப்பு ஊரிலும் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தை நெய்தல் நிலமாகிய கடற்கரை சார்ந்த பூமியிலும் மகா விஷ்ணு ஆலயத்தையும் அமைத்து வழிபடுகின்றனர். இந்த மகா விஷ்ணு ஆலயம் முன்னொரு காலத்தில் கரவாகு என்ற தற்போதய சாய்ந்த மருது ஊரிலும் பெரும் குடி மக்களாக சிறப்போடு வாழ்ந்த விஸ்வகுல கம்மியர்கள் 1725ம் ஆண்டு முதலாக கரவாகுப் பற்றுக் கம்மாளர் என்ற சாசன உரிமை உடையோராக இருந்த காலத்தில் விஷ்ணுவழிபாடு உடையவராக இருந்திருக்கின்றார்கள். இக் கரவாகுப் பற்றுக் கம்மாளர் பிற்காலங்களில் ஏற்பட்ட இனவன்ம குரோதங்களினால் ஏற்பட்ட முஸ்லிம் , தமிழ் கலவரங்களில் இடர் பாடுகளினால் இடம் பெயர்ந்து பாண்டிருப்பு கடற்கரை சார்பூமியில் குடியேறி அங்கு தாங்கள் முன்னமே வழிபாடு செய்த விஷ்ணு வழிபாட்டை தொடங்கி சிறப்போடு நடத்தி வருகின்றார்கள் மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னொரு காலத்தில் புலியமாறன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்குட்பட்ட புளியந்தீவு எனும் மட்டக்களப்பு நகரின் வடகிழக்கு சார்ந்த பெருநிலமாகிய கோட்டமுனை எனும் பழமை சார் நல்விடத்தில் மகமாரியம்மன் வழிபாடு உடையவகளாக விஸ்வ குல கம்மியர்கள் வாழ்கின்றார்கள். இதே போல் தாளங்குடா எனும் பண்டைய கிராமத்தில் தட்டார் தெரு என்ற மாளிகையடி வழவுக்கு அருகாமையில் சந்தி மாரியம்மன் என்ற பெயரோடு மாரியம்மன் வழிபாட்டையும் பிள்ளையார் வழிபாட்டையும் தொடங்கி தற்போதும் சிறிய குடும்பங்கள் உள்ள போதும் மாரியம்மன் வழிபாட்டை விடாமல் செய்து வருகின்றார்கள். ஏறாவூர் பதி வாழும் விஸ்வ குல கம்மியர்கள் வரலாற்றுப் பெருமை மிக்கவர்களாகவும் நாகர் குல மன்னனாகிய நல்லியக் கோடான் மன்னனின் பேராட்சிக்கு உட்பட்ட இப் பதி மக்கள் ஏறாவூர் பிரதான வீதியில் சித்தி விநாயகர் ஆலயத்தையும் மாங்காட்டுக் காளி என்ற பெயர் கொண்ட பத்திரகாளி அம்மன் ஆலயத்தையும் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆரையம்பதியில் தனி வடபத்திரகாளி கோயிலும் பெரிய போரதீவில் மிகப் பழமை வாய்ந்த பெருங்குடி மக்களாகவும் பண்டை இயக்கர் நாகரின் தொன்மம் சான்ற பத்திரகாளியம்மன் ஆலயமும் சோழர் காலத்தில் சிற்பக்கலை வல்லுனர்களால் கொண்டு வரப்பட்ட தட்சணா கணபதியும் ,தட்சணா காளியும் ஆன இரண்டு அரும் பெரும் விக்கிரகங்களை தன்னகத்தே கொண்ட அம்மன் ஆலயமும் அதைச் சார்ந்த முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயமும் பெரிய போரதீவின் விஸ்வ குல கம்மியரின் சிறப்பு மிக்க ஆலயங்களாகும். பெரிய போரதீவின் இணைக்கிராமமாக போரதீவு விஸ்வ குல கம்மியரின் பிற்கால குடியிருப்பாகவும் மேற்படி கிராமத்தின் மேற்குப் பக்கமாக அமைந்த முனைத்தீவு கிராமத்தின் மிகப்பழமையான மாணிக்கப் பிள்ளையார் ஆலயமும், அதன் மருங்கில் 2006ம் ஆண்டு தொடங்கிய பத்திரகாளி அம்மன் ஆலயமும் முனைத்தீவு விஸ்வ குல கம்மியற்கு சிறப்புடைய ஆலயங்களாகும்.
கொழும்பு மாநகரிலும் காலி போன்ற சிங்கள பிரதேசங்களிலும் காளி வழிபாடு அமைகின்றன. இத்தகு உயரிய சிறப்புமிக்க அன்னை வழிபாடாகிய காளி வழிபாடு கிழக்கிலங்கையில் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட கூனித்தீவு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் ஈறாகவும் விஸ்வப் பிரம்மகுலத்தவர்கள் என போற்றப்படும் கம்மியர்களின் குலதெய்வ வழிபாடாக தாங்கள் தொழில் செய்யும் பட்டறை எனும் அடையலில் பத்திர காளியம்மனை யந்திர பிரதிஷ்டையாக வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கூனித்தீவு பத்திர காளி கோயில் (திருகோணமலை மாவட்டம்)
ஏறாவூர் பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
ஆரையம்பதி பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
ஓந்தாச்சிமடம் பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
பெரிய கல்லாறு பத்திரகாளி கோயில் (மட்டக்களப்பு மாவட்டம்)
பாண்டிருப்பு பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
அன்னமலை பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
அக்கரைப் பற்று பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
தம்பிலுவில் பத்திரகாளி கோயில் (அம்பாறை மாவட்டம்)
மேற்குறித்த இடங்களில் விஸ்வகுல கம்மியர்களும் சீர்மிகுந்த சிறப்போடுவாழ்கின்றனர். இதில் பெரிய கல்லாறு விஸ்வகுல கம்மியர்கள் முருக வழிபாட்டையும் தங்களோடு ஈடுபடுத்தி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம் என்ற பெயரோடு பழமை வாய்ந்த முருகன் கோயிலையும் நெய்தல் நிலமாகிய கடற்கரை சார்ந்த உதயபுரம் எனும் திருவிடத்தில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தையும் அமைத்து வழிபடுகின்றனர்
இதே போல் பாண்டிருப்பு ஊரிலும் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தை நெய்தல் நிலமாகிய கடற்கரை சார்ந்த பூமியிலும் மகா விஷ்ணு ஆலயத்தையும் அமைத்து வழிபடுகின்றனர். இந்த மகா விஷ்ணு ஆலயம் முன்னொரு காலத்தில் கரவாகு என்ற தற்போதய சாய்ந்த மருது ஊரிலும் பெரும் குடி மக்களாக சிறப்போடு வாழ்ந்த விஸ்வகுல கம்மியர்கள் 1725ம் ஆண்டு முதலாக கரவாகுப் பற்றுக் கம்மாளர் என்ற சாசன உரிமை உடையோராக இருந்த காலத்தில் விஷ்ணுவழிபாடு உடையவராக இருந்திருக்கின்றார்கள். இக் கரவாகுப் பற்றுக் கம்மாளர் பிற்காலங்களில் ஏற்பட்ட இனவன்ம குரோதங்களினால் ஏற்பட்ட முஸ்லிம் , தமிழ் கலவரங்களில் இடர் பாடுகளினால் இடம் பெயர்ந்து பாண்டிருப்பு கடற்கரை சார்பூமியில் குடியேறி அங்கு தாங்கள் முன்னமே வழிபாடு செய்த விஷ்ணு வழிபாட்டை தொடங்கி சிறப்போடு நடத்தி வருகின்றார்கள் மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னொரு காலத்தில் புலியமாறன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்குட்பட்ட புளியந்தீவு எனும் மட்டக்களப்பு நகரின் வடகிழக்கு சார்ந்த பெருநிலமாகிய கோட்டமுனை எனும் பழமை சார் நல்விடத்தில் மகமாரியம்மன் வழிபாடு உடையவகளாக விஸ்வ குல கம்மியர்கள் வாழ்கின்றார்கள். இதே போல் தாளங்குடா எனும் பண்டைய கிராமத்தில் தட்டார் தெரு என்ற மாளிகையடி வழவுக்கு அருகாமையில் சந்தி மாரியம்மன் என்ற பெயரோடு மாரியம்மன் வழிபாட்டையும் பிள்ளையார் வழிபாட்டையும் தொடங்கி தற்போதும் சிறிய குடும்பங்கள் உள்ள போதும் மாரியம்மன் வழிபாட்டை விடாமல் செய்து வருகின்றார்கள். ஏறாவூர் பதி வாழும் விஸ்வ குல கம்மியர்கள் வரலாற்றுப் பெருமை மிக்கவர்களாகவும் நாகர் குல மன்னனாகிய நல்லியக் கோடான் மன்னனின் பேராட்சிக்கு உட்பட்ட இப் பதி மக்கள் ஏறாவூர் பிரதான வீதியில் சித்தி விநாயகர் ஆலயத்தையும் மாங்காட்டுக் காளி என்ற பெயர் கொண்ட பத்திரகாளி அம்மன் ஆலயத்தையும் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆரையம்பதியில் தனி வடபத்திரகாளி கோயிலும் பெரிய போரதீவில் மிகப் பழமை வாய்ந்த பெருங்குடி மக்களாகவும் பண்டை இயக்கர் நாகரின் தொன்மம் சான்ற பத்திரகாளியம்மன் ஆலயமும் சோழர் காலத்தில் சிற்பக்கலை வல்லுனர்களால் கொண்டு வரப்பட்ட தட்சணா கணபதியும் ,தட்சணா காளியும் ஆன இரண்டு அரும் பெரும் விக்கிரகங்களை தன்னகத்தே கொண்ட அம்மன் ஆலயமும் அதைச் சார்ந்த முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயமும் பெரிய போரதீவின் விஸ்வ குல கம்மியரின் சிறப்பு மிக்க ஆலயங்களாகும். பெரிய போரதீவின் இணைக்கிராமமாக போரதீவு விஸ்வ குல கம்மியரின் பிற்கால குடியிருப்பாகவும் மேற்படி கிராமத்தின் மேற்குப் பக்கமாக அமைந்த முனைத்தீவு கிராமத்தின் மிகப்பழமையான மாணிக்கப் பிள்ளையார் ஆலயமும், அதன் மருங்கில் 2006ம் ஆண்டு தொடங்கிய பத்திரகாளி அம்மன் ஆலயமும் முனைத்தீவு விஸ்வ குல கம்மியற்கு சிறப்புடைய ஆலயங்களாகும்.