..:: வரலாறு ::..
சிவபூமி ஆகிய இலங்கையின் கிழக்கு கரையில் நிரை வளம் கொண்ட பூமியாகவும் குறைவில்லாத தெய்வ அருள் கனிந்த பூமியகவும் விளங்குவது மட்டக்களப்பு என்னும் மாநாடு . இப்பெருநகரம் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே குமுகன் ஆறுவரையும் பரந்து விரிந்து செறிந்தும் வளம் கொழிக்கும் நிலவளமும் ஜீவ நதிகளும் உயிர் கொண்டு பாயும் மட்டக்களப்பு தமிழகம் முல்லை, மருதம், குறிஞ்சி, நெல்லை, ஆகிய நான்கு நிலங்களும் இத்தமிழகத்தின் பிரியா நிலங்கள். பெரும்மலை, பெரு வயல்கள், பெருங்கடல்கள், இத்தனையும் சிவாலயங்கள், சக்தியாலயங்கள் என பக்தி வழிகண்டு பரவசமாகி நிற்கும் தெய்வீகபூமி, வைத்தியம், மந்திரம், சோதிடம், எனமுப்பொருள்களின் உண்மைகளையும் உணர்ந்த வித்தடங்கிய ஆன்றோர் வாழும் பூமி இப்பெரும் மட்டக்களப்பு தமிழகத்தின் பால் சித்தாண்டி, ஏறாவூர், கோட்டைமுனை,ஆரையம்பதி, தாழங்குடா, பெரியபோரதீவு, மூனைத்தீவு, ஓந்தாச்சிமடம், பெரியகல்லாறு, அன்னமலை, பாண்டிருப்பு, அக்கறைப்பற்று, தம்பிலுவில்,பொத்துவில், என்ற இப்பெரும் பகுதிகளில் கலைமிகு கம்மிய குலத்தவர்களாகிய விஸ்வப்பிரம்ம குலமக்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்கின்றார்கள்.
அவர்களின் அடையல் தெய்வமாகிய அன்னை பத்திரகாளியை குலதெய்வமாக கொண்டு, கோட்டைமுனை, தாழங்குடா, பொத்துவில், தவிர்ந்த ஏனையபகுதிகளில் காளி அன்னைக்கு பேராலயங்களை அமைத்து ஆகமம் பெரிதும் சாராத பாரம்பரியமரபு வழி பத்தாதிகளின் மூலம் சக்தி விழாக்களை ஆண்டு தோறும் பக்தியோடு செய்துவருகின்றனர். தென்பால் 18மைல் (29km) தொலைவில் கிழக்கே பெருங்கடல், தெற்கே அழகாய் வளைந்து ஓடும் ஆறு வடக்கே கடலும் அணைகளும் கலந்த தோனாக்கள் மேற்கே பெரும் கிராமங்களை கொண்டு கல்முனை மட்டக்களப்பின் பிரதான நெடும்பாதையில் இவ்வழகிய ஓந்தாச்சிமடம் கிராமம் என்பதை விட நகரம் என்பதே சிறப்பு. இச்சிறப்பு மிக்க ஓந்தாச்சிமடம் என்ற இப்பலம்பெரும் நற்பதி இந்திய மண்ணில் இருந்து நாவாய் வழியாக கடல் மார்க்கமாக வந்து ஓந்தாச்சி என்ற சிற்றரசனின் (குறுநில மன்னன்) வரலாற்றோடு தொடர்புடையது.
அக்குடியோர் என்ற சிறப்புமிகு குடியினர் பதியாக பதிந்த கிராமம் . ஓந்தாச்சி என்கின்ற அந்த மன்னன் தான் கொண்டு வந்த தன்குலதெய்வமாகிய சிவமுத்து மாரியம்மனுக்கு மடாலயமாக மடம் ஒன்றை அமைத்து அம் மடத்திலே அருவ வழிபாடாக (உருவங்கள் ஏதுமின்றி) சிவ வழிபாட்டையும் சக்திவழிபாட்டையும் ஒருங்கே வழிபாடு செய்து வந்தான். அவ்வழிபாடே அன்றிலிருந்து இன்று வரை ஓந்தாச்சிமடத்தின் பழமையின் மாட்சியாக அன்னை முத்து மாரியின் அருளாட்சி ஆற்று நதி தென்பால் அறவணைக்க சித்திவிநாயகரின் மருகிலே வீற்றிருந்து அருள்மழை பொழிகின்றாள். இத்தகு தென்புறத்தே வாழைசக்தியாகிய மகமாரி கிழக்கை நோக்கி விஷ்வகுல வங்கப்பெருங்கடல் ஆற்பரிக்க வடமுகம் நோக்கி வீற்றிருக்கின்றாள். ஓந்தாச்சிமடம் என்ற புண்ணியபதிக்கு கிடைத்த இரு கண்மணிகள் அன்னை மாரியும் அன்னை மாகாளியும். இங்கே நாம் கானும் வரலாற்று படிப்படியாக அவ்வாலய வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தினர்
அவ்வாண்டிலே (1963) ஒரு நிர்வாகம் கட்டமைப்பினை எற்படுத்தினர். செல்லுதற்கரிய பல அற்புதங்களை இத் தாய் தான் வந்து அமர்ந்த முதலாக இன்று வரை நிறைவாக செய்து வருகிறார். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு என்ற பாரதியின் வாக்கிற்கு ஒப்ப தன் நம்பினார் கைவிடாது ஊர் பதியிலும் உள்ளத்து பதிவிலும் நிரந்தமாய் சத்தியமாய் குடியிருந்து அருளாட்சி செய்கின்றாள். குடிழில் இருந்து ஆலயம் இம்மக்களின் பெரும் முயற்சியால் உறுத்தியாய் மடாலயமாக அமைத்து குடமுழுக்கு, பெரும் சாந்தி செய்து ஆண்டுதோறும் ஆனி உத்திரத்தின் அன்று சிறப்பு பெரும் பூஜையாற்றி ஆனி உத்திரத்தின் பின்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவின் நிகழ்வான நோற்புச்சடங்கினையும் மறுநாள் புதன் கிழமை காலை தீ மிதிப்பினையும் சிறப்பாக செய்து வருகின்றனர். அத்தோடு வெள்ளிகிழமை சிறப்பு பூஜையும் பூரணையில் விசேட பூஜையும் ஆற்றி வருகின்றனர்.
அவர்களின் அடையல் தெய்வமாகிய அன்னை பத்திரகாளியை குலதெய்வமாக கொண்டு, கோட்டைமுனை, தாழங்குடா, பொத்துவில், தவிர்ந்த ஏனையபகுதிகளில் காளி அன்னைக்கு பேராலயங்களை அமைத்து ஆகமம் பெரிதும் சாராத பாரம்பரியமரபு வழி பத்தாதிகளின் மூலம் சக்தி விழாக்களை ஆண்டு தோறும் பக்தியோடு செய்துவருகின்றனர். தென்பால் 18மைல் (29km) தொலைவில் கிழக்கே பெருங்கடல், தெற்கே அழகாய் வளைந்து ஓடும் ஆறு வடக்கே கடலும் அணைகளும் கலந்த தோனாக்கள் மேற்கே பெரும் கிராமங்களை கொண்டு கல்முனை மட்டக்களப்பின் பிரதான நெடும்பாதையில் இவ்வழகிய ஓந்தாச்சிமடம் கிராமம் என்பதை விட நகரம் என்பதே சிறப்பு. இச்சிறப்பு மிக்க ஓந்தாச்சிமடம் என்ற இப்பலம்பெரும் நற்பதி இந்திய மண்ணில் இருந்து நாவாய் வழியாக கடல் மார்க்கமாக வந்து ஓந்தாச்சி என்ற சிற்றரசனின் (குறுநில மன்னன்) வரலாற்றோடு தொடர்புடையது.
அக்குடியோர் என்ற சிறப்புமிகு குடியினர் பதியாக பதிந்த கிராமம் . ஓந்தாச்சி என்கின்ற அந்த மன்னன் தான் கொண்டு வந்த தன்குலதெய்வமாகிய சிவமுத்து மாரியம்மனுக்கு மடாலயமாக மடம் ஒன்றை அமைத்து அம் மடத்திலே அருவ வழிபாடாக (உருவங்கள் ஏதுமின்றி) சிவ வழிபாட்டையும் சக்திவழிபாட்டையும் ஒருங்கே வழிபாடு செய்து வந்தான். அவ்வழிபாடே அன்றிலிருந்து இன்று வரை ஓந்தாச்சிமடத்தின் பழமையின் மாட்சியாக அன்னை முத்து மாரியின் அருளாட்சி ஆற்று நதி தென்பால் அறவணைக்க சித்திவிநாயகரின் மருகிலே வீற்றிருந்து அருள்மழை பொழிகின்றாள். இத்தகு தென்புறத்தே வாழைசக்தியாகிய மகமாரி கிழக்கை நோக்கி விஷ்வகுல வங்கப்பெருங்கடல் ஆற்பரிக்க வடமுகம் நோக்கி வீற்றிருக்கின்றாள். ஓந்தாச்சிமடம் என்ற புண்ணியபதிக்கு கிடைத்த இரு கண்மணிகள் அன்னை மாரியும் அன்னை மாகாளியும். இங்கே நாம் கானும் வரலாற்று படிப்படியாக அவ்வாலய வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தினர்
அவ்வாண்டிலே (1963) ஒரு நிர்வாகம் கட்டமைப்பினை எற்படுத்தினர். செல்லுதற்கரிய பல அற்புதங்களை இத் தாய் தான் வந்து அமர்ந்த முதலாக இன்று வரை நிறைவாக செய்து வருகிறார். நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு என்ற பாரதியின் வாக்கிற்கு ஒப்ப தன் நம்பினார் கைவிடாது ஊர் பதியிலும் உள்ளத்து பதிவிலும் நிரந்தமாய் சத்தியமாய் குடியிருந்து அருளாட்சி செய்கின்றாள். குடிழில் இருந்து ஆலயம் இம்மக்களின் பெரும் முயற்சியால் உறுத்தியாய் மடாலயமாக அமைத்து குடமுழுக்கு, பெரும் சாந்தி செய்து ஆண்டுதோறும் ஆனி உத்திரத்தின் அன்று சிறப்பு பெரும் பூஜையாற்றி ஆனி உத்திரத்தின் பின்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவின் நிகழ்வான நோற்புச்சடங்கினையும் மறுநாள் புதன் கிழமை காலை தீ மிதிப்பினையும் சிறப்பாக செய்து வருகின்றனர். அத்தோடு வெள்ளிகிழமை சிறப்பு பூஜையும் பூரணையில் விசேட பூஜையும் ஆற்றி வருகின்றனர்.