பட்டறையில் பத்திரை வழிபாடு
விஸ்வ
குல கம்மியர்கள் பொற் தொழில் செய்யும் இடத்தை “அக்க” சாலை என்னும்
அத்தொழில் செய்யும் பட்டறையை அடையல் என்றும் கூறுவர். கொல்லர் பட்டறையை
கொல்லர் பட்டறை என்றும் தச்சர் பட்டறையை தச்சர் பட்டறை என அழைப்பர். ஆனால்
மட்டக்களப்பு தமிழகத்தில் பொற் தொழில் செய்யும் பட்டறையை அடையர் என்ற
பெயரோடு அம்மனின் மூலஸ்தான கருவறையில் இஸ்தாபிக்கப்பட்டுள்ளது இப்பட்டரை
ஏறாவூர், ஆரையம்பதி, ஓந்தாச்சிமடம்,பெரியகல்லாறு, பாண்டிருப்பு ஆகிய
இடங்களில் தாம்புலச் சேர்வையில் வார்க்கப்பட்ட எண்கோணப்பட்டறை, அறுகோண பட்டறை என்ற அமைப்பில் இஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பெரியபோரதீவு, அண்ணாமலை, அக்கரைபற்று , தம்பிலுவில், ஆகிய இடங்களில் பழைய முறையிலான இரும்பாலான வட்டப்பட்டரை , சதுரப்பட்டரை இஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இப் பட்டறையாகிய அடயலின் மேல் காளியம்மனின் சக்தி வாய்ந்த “ஜந்திரம்” பதிக்கப்பட்டுள்ளது. அடையல் முன்னதாகவும் அதற்கு பின்னதாகவும் அம்மனின் விக்கிரகம் இஸ்தாபிக்கப்பட்டும். பத்ததி பாடலில் “அந்தம் இலங்கும் அடையல் இடத்தே ஒன்பது கும்பம் ஒளிர் பெற நிறுத்தி” எனும் பாடலும் கட்டடையல் பூசை மடை கொண்ட மாதாவே காளிகாதேவியே பூசை கொண்டருளவே” என்னும் பாடல்களிலே சமர் செய்து பாதரை கொன்றழித்து அடையலிலே அம்மே கண்மலராய்” என்பது எடுத்து காட்டாகும்.
பட்டறை வழிபாடும் இப்பத்தரையாகிய காளியும் கம்மியருக்கே இரண்டு கண்ணாய் மிளிர்வன. பட்டறை இன்ற பத்திரை இல்லை பத்தரையன்றி பட்டறையில்லை என்பது போல் “அன்னையும் அடையலும்” சிவமும் சகதியுமாக அமர்ந்து காட்சிதருகின்றார்கள்.
பெரியபோரதீவு, அண்ணாமலை, அக்கரைபற்று , தம்பிலுவில், ஆகிய இடங்களில் பழைய முறையிலான இரும்பாலான வட்டப்பட்டரை , சதுரப்பட்டரை இஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இப் பட்டறையாகிய அடயலின் மேல் காளியம்மனின் சக்தி வாய்ந்த “ஜந்திரம்” பதிக்கப்பட்டுள்ளது. அடையல் முன்னதாகவும் அதற்கு பின்னதாகவும் அம்மனின் விக்கிரகம் இஸ்தாபிக்கப்பட்டும். பத்ததி பாடலில் “அந்தம் இலங்கும் அடையல் இடத்தே ஒன்பது கும்பம் ஒளிர் பெற நிறுத்தி” எனும் பாடலும் கட்டடையல் பூசை மடை கொண்ட மாதாவே காளிகாதேவியே பூசை கொண்டருளவே” என்னும் பாடல்களிலே சமர் செய்து பாதரை கொன்றழித்து அடையலிலே அம்மே கண்மலராய்” என்பது எடுத்து காட்டாகும்.
பட்டறை வழிபாடும் இப்பத்தரையாகிய காளியும் கம்மியருக்கே இரண்டு கண்ணாய் மிளிர்வன. பட்டறை இன்ற பத்திரை இல்லை பத்தரையன்றி பட்டறையில்லை என்பது போல் “அன்னையும் அடையலும்” சிவமும் சகதியுமாக அமர்ந்து காட்சிதருகின்றார்கள்.